விழுப்புரம் : திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள திருமலைசாமி என்ற திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் கப்பியாம்புலியூர் சேர்ந்து பிரனிதா ஆகியோருக்கு 17.6.2022 வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் Dj நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதல் காரணத்தினால் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் தடி, கம்பி மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாக பெண் வீட்டாரை தாக்கியதில் பெண் வீட்டைச் சேர்ந்து 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் குறித்து திருமணம் மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு காவல் துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரவில்லை.
இரு விட்டார்களுக்கு இடையே சண்டை மோதல் முடிந்த பிறகு சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த காவல்துறையினர் இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சரியான நேரத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் வந்து இருந்தால் இந்த மோதல் தவிர்த்திருக்கலாம் என்று பெண் வீட்டாரின் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பெண் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாரோ காவல் நிலையத்தில் புகார் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.