தமிழகம்

எங்க ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது : பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!

தாராபுரம் நகராட்சியுடன் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து. 200-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30-வார்டுகள் உள்ளன தாராபுரம் நகராட்சி பகுதிகளை யொட்டி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகள் உள்ளது.

இந்த நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சி உடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவுண்டச்சி புதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் அவ்வாறு நகராட்சியுடன் இணைத்தால் 100-நாள் வேலை கிடைக்காது எனவும் மேலும் தங்கள் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்துவரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் எனவும் மேலும் அவ்வாறு நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் உள்ள 8.100 வாக்காளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவர்களது ஆதார் அட்டை, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் இடத்தில் திருப்பி கொடுக்கப் போவதாகவும் மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளதாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.