தமிழகம்

எங்க ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது : பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!

தாராபுரம் நகராட்சியுடன் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து. 200-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30-வார்டுகள் உள்ளன தாராபுரம் நகராட்சி பகுதிகளை யொட்டி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகள் உள்ளது.

இந்த நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சி உடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவுண்டச்சி புதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் அவ்வாறு நகராட்சியுடன் இணைத்தால் 100-நாள் வேலை கிடைக்காது எனவும் மேலும் தங்கள் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்துவரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் எனவும் மேலும் அவ்வாறு நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் உள்ள 8.100 வாக்காளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவர்களது ஆதார் அட்டை, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் இடத்தில் திருப்பி கொடுக்கப் போவதாகவும் மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளதாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

6 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

9 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

39 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.