தமிழகம்

துரைமுருகன் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்.. கூட்டணி கட்சித் தலைவர் குமுறல்!

கட்சிக் கொடிகளை அகற்றக்கோரி திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவிட்டது, தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டதாக சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

தேனி: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், துரைமுருகனின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பெ.சண்முகம், “துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களைப் போன்றவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு குறித்து, மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.

இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, அந்த தீர்ப்பு குறித்து கலந்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல் நாங்கள் தன்னிச்சையாக அகற்றிக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். இது திமுகவின் சொந்த பிரச்னை அல்ல. அரசியல் கட்சி, கொடி என அனைத்தும் சட்டத்தில் இருக்கக்கூடிய விஷயம்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறினால் சரியாக இருக்கும். எனவே, திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதிமன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் எனத் தெரியவில்லை. சமீப காலமாக நீதிபதிகள் எல்லை மீறுகின்றனர்.

அதன் தொடர்ச்சிதான், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் கட்டணம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.‌ போலீசாரிடம் அனுமதி கேட்டால்தானே கட்டணம் செலுத்த வேண்டும். இனி அனுமதி கேட்க மாட்டோம்.

இதையும் படிங்க: திருநங்கை கொடூர கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலன் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!

ஏனென்றால், எங்களின் செந்தொண்டர் படை போதும் பாதுகாப்பிற்கு. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், கருத்தரங்கு, மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமை. ஆனால், அதனை மீறும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் பழைய தீர்ப்பை கடந்த மார்ச் 6ஆம் தேதி உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

23 minutes ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

1 hour ago

தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…

2 hours ago

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…

2 hours ago

என் மானமே போச்சு.. தனிக்குடித்தனம் போன ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்!

நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…

3 hours ago

என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!

பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…

3 hours ago

This website uses cookies.