தமிழகம்

மறைந்தார் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்… தள்ளாடும் வயதிலும் சாதித்த இயற்கை விவசாயி.. பிரதமர் உருக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (109). இவரது கணவர் ராமசாமி முதலியார்.

இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் இவரது சகோதரி நஞ்சம்மாளின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

தனது இளம் வயதிலிருந்து விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளார். அன்று முதல் தனது முதுமையான 100 வயதை கடந்தும் இவர் விவசாயம் செய்து வந்ததார்.

இதனால் மத்திய அரசு இவரின் விவசாய ஆர்வத்தை கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கியது. மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கும் போது பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

மேலும் படிக்க: பத்மஸ்ரீ விருது வென்ற 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்த பிரதமர் மோடி : நெகிழ்ந்த அண்ணாமலை!!

அண்மையில் இவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டிக்கு பதிலாக இவரது பேத்தி கமலம் இவரது மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதை பெற்று கொண்டனர்.

இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பாப்பம்மாள் நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். இதனையடுத்து தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவர் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து இவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

5 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

38 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

18 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

This website uses cookies.