அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!
Author: Selvan23 February 2025, 8:12 pm
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள்
இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்ததுது விக்கெட்களை இழந்தன.
மிகவும் பரபரப்புக்கு மத்தியில் இரு அணிக்கும் முக்கியமான மேட்ச் ஆக இருக்கும் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 10 ரன்களை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார்.
அடுத்ததாக அனுபவ வீரர் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்,அந்த அணியில் சவுத் ஷகீல் மட்டுமே கொஞ்சோ நிதானமாக ஆடி ர62 ன்கள் சேர்த்தார்.
இதையும் படியுங்க: நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
பாகிஸ்தான் அணி 43வது ஓவரில் தான் தன்னுடைய முதல் சிக்ஸரை பதிவு செய்தது.அந்த அணி 49.4 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 241 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும்,ரொம்ப கட்டுக்கோட்பாக பந்து வீசினார்,அணியில் மற்ற வீரர்கள் எல்லோரும் தங்களுடைய பங்கிற்கு விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை சுருட்டினார்கள்.