பழனி அருகே பேக்கரியில் வேலை செய்யும் இளைஞரை அடித்து துவைத்த போதை ஆசாமிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள மேல்கரைபட்டி கிராமத்தில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு மூன்று இளைஞர்கள் புகுந்து கடையில் வேலை செய்யும் அரவிந்த்சாமி என்பவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மதுபோதையில் பேக்கரிக்கு வந்த இளைஞர்கள் கடையில் இருந்த நாற்காலிகளை எடுத்து தகராறு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!!
கடையில் வேலை செய்யும் அரவிந்த்சாமி என்பவர் இளைஞர்களை கடையைவிட்டு வெளியேறும்படி எச்சரித்துள்ளார். ஆவேசம் அடைந்த போதை ஆசாமிகள் கடைக்குள் புகுந்து அரவிந்த்சாமியை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். உடனடியாக அரவிந்த்சாமி கீரனூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வருவதை அறிந்த போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
புகாரைப் பெற்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட கல்துறை கிராமத்தைச் சார்ந்த விஜய், கவின், கார்த்தி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பேக்கரியில் புகுந்த போதை ஆசாமிகள் கடையில் வேலை செய்யும் நபரை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.