திண்டுக்கல் : பழனியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி- சவரிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் யானையின் தந்ததங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி வனத்துறை அதிகாரி பழனிகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அடி நீளமுள்ள தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சவரிக்காடு சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாச்சலூர் மற்றும் அமரபூண்டி சேர்ந்த ராஜ் ,முத்துவேல், சிவலிங்கம், ராஜேஷ் பிரபு ஆகியோர் வனப்பகுதியில் கிடந்த யானையின் தந்தத்தை சில நாட்களுக்கு முன் எடுத்து வந்துள்ளனர். பின்னர், நண்பர்களின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.