பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்த போது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த காட்சி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் 4 கோடி மதிப்பில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் கலந்து கொண்டார்.
பின்னர் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து மாணவிகள் பாடினர். அதனை தொடர்ந்து மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர், ஆசிரியர்கள், கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, நகராட்சி ஆணையர் பாலமுருகன் நாட்டுப்பண்-ஐ மதிக்காமல் அலட்சியத்துடன் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தார்.
பழனி நகராட்சி ஆணையரே தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது தொலைபேசியில் பேசி கொண்டு இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.