பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் முத்துக்குமார் சுவாமி, வள்ளி, தேவசேனாவுடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, வெள்ளி தேரோட்டமும், பிப்ரவரி நான்காம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் முத்துக்குமாரசாமி ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வருவார்.
இதனை அடுத்து, நேற்று இரண்டாம் திருவிழாவில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தேவசேனா, வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் நான்கு ரத வீதியிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.