பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் மாரிமுத்து. பழனி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடங்களை இணை ஆணையர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதும், சரவணா பொய்கை பக்தர்கள் குளிக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் மொட்டை அடிக்க கட்டணம் வசூல் செய்வதில்லை, மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தால், அந்த நபர்கள் பணியிட நீக்கம் செய்வார் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மொட்டை அடிப்பதற்காக இணைய வழியில் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அவற்றில் உள்ள இடர்பாடுகள் நீக்கப்பட்டும் எனவும் இணைஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.