தமிழகம்

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்… பாய்ந்து வந்த கார் : நொடியில் சோகம்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக சாலை ஓரம் அதிகாலை 5 மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பழைய கன்னிவாடி கரிசல் பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து மேற்படி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்க: அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?

இந்த விபத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கேசவன், மற்றும் மதுரை வடிவேலன் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடைக்கல ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுவன் கேசவனின் தந்தை அழகர் பலத்த காயங்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் கார் மோதி பலியான சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…

39 minutes ago

இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்

களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

1 hour ago

முதலாளிக்கு குளிர்பானத்தில் விஷம்… துரோகம் செய்த சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!

வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…

1 hour ago

என்னைய நடிக்கவிடக்கூடாதுனு சொன்னாங்க; அரசியல் காரணமா?- மனம் நொந்து போய் பேசிய வடிவேலு

வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…

2 hours ago

திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…

3 hours ago

This website uses cookies.