பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன கலைச்செல்வன் (27), கோபிநாதன் (28), அமீர் பாட்சா (26), அகமது அப்துல்லா (28), கோயல் நிஷாந்த் (26) ஐந்து பேரும், கேரளா மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
பழனி அருகே சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபிநாதன் மற்றும் கலைச்செல்வன் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.