பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையோரம் வியாபாரம் செய்து வந்த பெண்ணின் தாலிச் சங்கிலியை, உதவி ஆணையர் லட்சுமி இழுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்களையும் பொது மக்களையும் உதவி ஆணையர் லட்சுமி மிகவும் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் வியாபாரிகளை உதவியாணையர் லட்சுமி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் உதவி ஆணையர் லட்சுமியை சிறைபிடித்தனர்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர்களிடம் திமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்ததால் கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான பிரச்சனைகள் பட்ட தள்ளுமுள்ளுவில் கவுன்சிலர்களுக்கும் காயம் ஏற்பட்டு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் உதவி ஆணையர் லட்சுமியை மீட்டு பத்திரமாக தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தற்பொழுது பழனி கோவில் தேவஸ்தான அலுவலகம் முன்பு வியாபாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.