Categories: தமிழகம்

பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை!

பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை!

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்ந்து பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்த காரணத்தால் சென்னையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது வருகிறது.

தற்போது சென்னை முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் அள்ளி செல்லப்படுகின்றன. இதை எல்லாம் அள்ளிக் கொண்டு போய் எங்கே கொட்டுவார்கள் தெரியுமா? அதே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான். இதற்காகவே 250 ஏக்கர் சதுப்பு நிலம் அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே குப்பையை கொண்டு போய் கொட்ட தனியாரிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான தீர்வுகளை கண்டறிந்து அரசாங்கத்திடம் கொடுத்து நிறைவேற்ற வைக்க நீங்க தயாரா? டிசம்பர் 16 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் நமக்கு நாமே கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு https://chat.whatsapp.com/DXRd4fn8OIp2MCr51zrVkr Chennai Flood Audit அறப்போர் whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இவ்வாறு அந்த அறப்போர் இயக்கம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் சார்பில் வெளியான மற்றொரு ட்வீட்டில் வேளச்சேரியில் ஏன் மழை வெள்ளம் வடியவில்லை என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. அது போல் மற்றொரு ட்வீட்டில் நீர்நிலைகளின் நில பயன்பாட்டை தனியாருக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும் சிஎம்டிஏ தடுத்து நிறுத்தப்படுமா? இதில் நடைபெறும் ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? உங்கள் பகுதியில் இது போல நீர்நிலைகளை அரசாங்கமே ஆட்டையை போட்டு தனியாருக்கு தாரை வார்க்கிறதா என்று எப்படி கண்டுபிடிக்கலாம்? என கேள்வி எழுப்பலாம்.

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் மழை நீரை பள்ளிக்கரணையில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் ஒக்கியம் மடுகு பகுதியின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி ஜெயராமன் கள ஆய்வையும் நடத்தியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.