திருப்பூர் ; பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுவதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பல்லடம் அரசு மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெரும் அளவிற்கு படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் வார்டில் உள்ள ஒரு பகுதியில் பெண்கள் குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அருள் புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இடிந்து விழுந்த மேற்கூரை குழந்தை படுத்திருந்த கட்டிலுக்கு அருகிலேயே விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக இந்த குழந்தை உயிர் தப்பியுள்ளது. மேலும் செவிலியர்கள் அனைத்து நோயாளிகளையும் வெளியேற்றினர். தற்போது நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சில நோயாளிகள் மருத்துவமனையில் உள் நோயாளி உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தின் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வார்டு பகுதியில் இருந்த கட்டில்கள் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தற்போது வெளியேற்றி வெளியே வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் நோயாளிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.