சூரிய ஒளிபட்டு காட்சி தந்த பனங்காட்டீஸ்வரர் ; சிவனை சூரியன் வழிபடும் காட்சி.. பக்தர்கள் பக்திப் பரவசம்!
விழுப்புரம் அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் கோவிலில் இன்று காலை 5.30 க்கு சித்திரை தமிழ்வருட பிறப்பை முன்னிட்டு வினாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சத்தியாம்பிகை, நேத்ரானேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 6.10 மணிக்கு கருவறையில் உள்ள நேத்ரானேஸ்வரர் மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபாடு நடந்தது. பின்னர் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் மீது ஒளி பட்டு சூரிய வழிபாடு நடந்தது.
சூரியன் வழி பட்ட பிறகு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது.
பழமை வாய்ந்த இந்த கோவிலில் கண்கள் பார்வை இழந்த சூரியன் நேத்ரானேஸ்வரரை வழிபட்டு மீண்டும் கண் பார்வை தெரிய ஆரம்பித்ததாக வரலாறு உண்டு.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை சுவாமி மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கண் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் இந்த கோவிலில் வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.
இந்து அறநிலைய துறை அதிகாரிகள் , கோவில் தர்மகர்த்தாகள், முக்கியஸ்தர்கள் முன்னின்று செய்தனர. கடலுார், விழுப்புரம் , புதுவை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.