திருப்பத்தூர் அருகே, ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து வெட்டிய கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த கோ.புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (50). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், திமுக துணைத் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி வசந்தி (40). இந்த நிலையில், தம்பதி நேற்று வீட்டிலிருந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர், இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டிலேயே வசந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதேநேரம், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளதாகவும், இரண்டு நாட்களாக இதற்கு பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’எங்க மக்கள மதிச்சு சந்திக்கனும்ல’.. மாஞ்சோலை மக்கள் ஸ்டாலின் மீது அதிருப்தி!
மேலும், இந்த நிலத்தில் இருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில், இன்று அந்த வழிக்கான பதிவு நடக்கவிருந்த நிலையில், மர்ம நபர்களால் திருப்பதி மற்றும் அவருடைய மனைவியை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நிலப் பிரச்சனை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.