திருப்பத்தூர் அருகே, ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து வெட்டிய கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த கோ.புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (50). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், திமுக துணைத் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி வசந்தி (40). இந்த நிலையில், தம்பதி நேற்று வீட்டிலிருந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர், இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டிலேயே வசந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதேநேரம், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளதாகவும், இரண்டு நாட்களாக இதற்கு பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’எங்க மக்கள மதிச்சு சந்திக்கனும்ல’.. மாஞ்சோலை மக்கள் ஸ்டாலின் மீது அதிருப்தி!
மேலும், இந்த நிலத்தில் இருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில், இன்று அந்த வழிக்கான பதிவு நடக்கவிருந்த நிலையில், மர்ம நபர்களால் திருப்பதி மற்றும் அவருடைய மனைவியை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நிலப் பிரச்சனை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.