காதல் திருமணம் செய்த மகளை, கணவன் கண்முன்னே பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரின் வினித். இவரும், அதே பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வரும் நவீன் படேல் என்பவரது மகளை பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.
அண்மையில், வினித் மற்றும் குரூத்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, வினித்தின் பெற்றோர் ஆசியுடன் திருமனம் செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை நவீன் படேல், மகள் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளித்தார்.
இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து, இருவரும் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.
கடந்த 25ம் தேதி கொட்டாக்குளத்தில் இருந்து குத்துக்கல்வலசைக்கு சென்ற புதுமண தம்பதியினர், புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைக்கு புறப்பட்டனர். இதனை நோட்டமிட்ட குரூத்திகாவின் குடும்பத்தினர், வினித்திடம் இருந்து அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
இதில், கடுமையாக தாக்கப்பட்டு, காதல் மனைவியை அவரது குடும்பத்தினர் தூக்கிச் சென்றதால், வினித் விரக்தியடைந்தார். பின்னர், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.