சென்னையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்த விற்ற பெற்றோர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக, குழந்தைகள் நல அமைப்பு தரப்பில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும், அவர்களுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்ட வீடியோக்கள் செல்போனில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், தனது மனைவியுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும், அதனை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ததும், இதேபோல், அப்பகுதியில் உள்ள பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தம்பதியைக் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்… திருப்பதி தரிசனத்தை முடித்து திரும்பிய திருச்சி பக்தர்கள் 4 பேர் பலி!
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த மற்றொருவர் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகள் யார், ஆபாச வீடியோக்களை இவர்களிடம் இருந்து பயன்படுத்தியவர்கள் யார் என்பது உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.