மயிலாடுதுறையில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சி எடுத்த கணவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (69) – செந்தாமரை (59) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளங்கோவன், ஹோமியோபதி மருத்துவராக இருந்தவர். மேலும், திராவிடர் கழகத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார்.
அதேநேரம், மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல், வீட்டின் கீழ்பகுதியில் மகன் தன் மனைவியுடன் தனியாகவும், மாடியில் இளங்கோவனும், செந்தாமரையும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளங்கோவனும், செந்தாமரையும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால், மகனும், மருமகளும் அவர்களைக் கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து பெரிய சத்தம் கேட்டுள்ளது.
இதனால் வீட்டின் ஒரு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், மாடிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்களுடன், அருகில் இருந்தவர்களும் தீயை அணைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, உடல் எரிந்த நிலையில் செந்தாமரை இறந்து கிடந்துள்ளார். அவரது மடியில் தலைவைத்தபடியே தீக்காயங்களுடன் இளங்கோவனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரை தூக்கச் சென்றவர்களிடம், `என் மனைவி செத்துப் போயிட்டாள், நானும் செத்துப்போறேன், என்னை பொழைக்க வைக்காதீங்க, இங்கேயே போட்டுடுங்க’ எனக் கதறியிருக்கிறார்.
இதையும் படிங்க: யாரு இவுங்க.. இங்கயே நிக்குறாங்க.. தட்டித்தூக்கிய பொதுமக்கள்.. பாராட்டிய போலீசார்!
இதனைத் தொடர்ந்து, உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 90 சதவீதம் உடல் தீயில் எரிந்த நிலையில், அபாயக் கட்டத்தில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், “எங்களை யாரும் கவனிக்கவில்லை. நோயுடன் அவதிப்பட்டதைவிட யாரும் அக்கறை காட்டாததே எங்களுக்கு துயரத்தையும், வலியையும் தந்தது. எனவே, தற்கொலை செய்து கொள்வதற்காக சிலிண்டரை வெடிக்க வைத்தோம்” என இளங்கோவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.