மயிலாடுதுறையில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சி எடுத்த கணவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (69) – செந்தாமரை (59) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளங்கோவன், ஹோமியோபதி மருத்துவராக இருந்தவர். மேலும், திராவிடர் கழகத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார்.
அதேநேரம், மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல், வீட்டின் கீழ்பகுதியில் மகன் தன் மனைவியுடன் தனியாகவும், மாடியில் இளங்கோவனும், செந்தாமரையும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளங்கோவனும், செந்தாமரையும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால், மகனும், மருமகளும் அவர்களைக் கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து பெரிய சத்தம் கேட்டுள்ளது.
இதனால் வீட்டின் ஒரு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், மாடிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்களுடன், அருகில் இருந்தவர்களும் தீயை அணைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, உடல் எரிந்த நிலையில் செந்தாமரை இறந்து கிடந்துள்ளார். அவரது மடியில் தலைவைத்தபடியே தீக்காயங்களுடன் இளங்கோவனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரை தூக்கச் சென்றவர்களிடம், `என் மனைவி செத்துப் போயிட்டாள், நானும் செத்துப்போறேன், என்னை பொழைக்க வைக்காதீங்க, இங்கேயே போட்டுடுங்க’ எனக் கதறியிருக்கிறார்.
இதையும் படிங்க: யாரு இவுங்க.. இங்கயே நிக்குறாங்க.. தட்டித்தூக்கிய பொதுமக்கள்.. பாராட்டிய போலீசார்!
இதனைத் தொடர்ந்து, உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 90 சதவீதம் உடல் தீயில் எரிந்த நிலையில், அபாயக் கட்டத்தில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், “எங்களை யாரும் கவனிக்கவில்லை. நோயுடன் அவதிப்பட்டதைவிட யாரும் அக்கறை காட்டாததே எங்களுக்கு துயரத்தையும், வலியையும் தந்தது. எனவே, தற்கொலை செய்து கொள்வதற்காக சிலிண்டரை வெடிக்க வைத்தோம்” என இளங்கோவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.