தமிழகம்

மகள் சாவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்.. தஞ்சையில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தஞ்சையில், பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக நவீன் காதலித்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிந்தார். ஆனால், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர், கடந்த ஜனவரி 2ஆம் தேதி தங்கள் மகள் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இருப்பினும், காதலர்கள், கடந்த ஆண்டி டிசம்பர் 31ஆம் தேதியே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி வத்தி கோட்டை காவல் நிலையத்தில் நவீன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்துக் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் அவளைக் கொன்று எரித்ததாகவும் அதில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரான பெருமாள் – ரோஜா உள்பட மூன்று உறவினர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், ஜனவரி 2ஆம் தேதி இரவு, ஐஸ்வர்யாவை பல்லடத்திலிருந்து அழைத்துச் சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும், அப்பெண்ணை நேராக ஒரு புளியமரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், பெருமாள் ஐஸ்வர்யாவை மரத்தின் ஒரு கிளையில் தூக்கில் தொங்கவிடச் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

மேலும், நீயே தூக்கில் தொங்க வேண்டும் என்றும் அவர் அவரது மகளிடன் கூறியுள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா தற்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பெருமாள் நாற்காலியை உதைத்துள்ளார். இதனால், ஐஸ்வர்யா உயிருக்குப் போராடியுள்ளார்.

ஆனால், ஐஸ்வர்யா இறந்துவிட்டதாக நினைத்து, அவரின் பெரியம்மா ஒருவர் அரிவாளால் கயிற்றை வெட்டி உள்ளார். ஆனால், கீழே விழுந்த ஐஸ்வர்யா உயிருடன் இருந்ததாலும், பெருமாளும், ரோஜாவும் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

10 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

11 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

11 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

12 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

12 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

12 hours ago

This website uses cookies.