தமிழகம்

மகள் சாவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்.. தஞ்சையில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தஞ்சையில், பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக நவீன் காதலித்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிந்தார். ஆனால், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர், கடந்த ஜனவரி 2ஆம் தேதி தங்கள் மகள் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இருப்பினும், காதலர்கள், கடந்த ஆண்டி டிசம்பர் 31ஆம் தேதியே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி வத்தி கோட்டை காவல் நிலையத்தில் நவீன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்துக் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் அவளைக் கொன்று எரித்ததாகவும் அதில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரான பெருமாள் – ரோஜா உள்பட மூன்று உறவினர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், ஜனவரி 2ஆம் தேதி இரவு, ஐஸ்வர்யாவை பல்லடத்திலிருந்து அழைத்துச் சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும், அப்பெண்ணை நேராக ஒரு புளியமரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், பெருமாள் ஐஸ்வர்யாவை மரத்தின் ஒரு கிளையில் தூக்கில் தொங்கவிடச் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

மேலும், நீயே தூக்கில் தொங்க வேண்டும் என்றும் அவர் அவரது மகளிடன் கூறியுள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா தற்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பெருமாள் நாற்காலியை உதைத்துள்ளார். இதனால், ஐஸ்வர்யா உயிருக்குப் போராடியுள்ளார்.

ஆனால், ஐஸ்வர்யா இறந்துவிட்டதாக நினைத்து, அவரின் பெரியம்மா ஒருவர் அரிவாளால் கயிற்றை வெட்டி உள்ளார். ஆனால், கீழே விழுந்த ஐஸ்வர்யா உயிருடன் இருந்ததாலும், பெருமாளும், ரோஜாவும் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

15 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.