தமிழகம்

மகள் சாவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்.. தஞ்சையில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தஞ்சையில், பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக நவீன் காதலித்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிந்தார். ஆனால், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர், கடந்த ஜனவரி 2ஆம் தேதி தங்கள் மகள் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இருப்பினும், காதலர்கள், கடந்த ஆண்டி டிசம்பர் 31ஆம் தேதியே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி வத்தி கோட்டை காவல் நிலையத்தில் நவீன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்துக் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் அவளைக் கொன்று எரித்ததாகவும் அதில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரான பெருமாள் – ரோஜா உள்பட மூன்று உறவினர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், ஜனவரி 2ஆம் தேதி இரவு, ஐஸ்வர்யாவை பல்லடத்திலிருந்து அழைத்துச் சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும், அப்பெண்ணை நேராக ஒரு புளியமரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், பெருமாள் ஐஸ்வர்யாவை மரத்தின் ஒரு கிளையில் தூக்கில் தொங்கவிடச் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

மேலும், நீயே தூக்கில் தொங்க வேண்டும் என்றும் அவர் அவரது மகளிடன் கூறியுள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா தற்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பெருமாள் நாற்காலியை உதைத்துள்ளார். இதனால், ஐஸ்வர்யா உயிருக்குப் போராடியுள்ளார்.

ஆனால், ஐஸ்வர்யா இறந்துவிட்டதாக நினைத்து, அவரின் பெரியம்மா ஒருவர் அரிவாளால் கயிற்றை வெட்டி உள்ளார். ஆனால், கீழே விழுந்த ஐஸ்வர்யா உயிருடன் இருந்ததாலும், பெருமாளும், ரோஜாவும் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.