தமிழகம்

பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரியுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் கவிபாலா (13). இவர், அருகே உள்ள பள்ளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் பிற்பகல் மாணவி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது கவிபாலா திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில், அவருக்கு மூக்கில் ரத்தம் வந்துள்ளது. இதனைப் பார்த்த புக்கரம்பையைச் சேர்ந்த தியா (15) மற்றும் ஆண்டிக்காட்டைச் சேர்ந்த சகாயமேரி (16) ஆகிய இரண்டு மாணவிகளும் மயக்கமடைந்துள்ளனர்.

பின்னர், இதனைப் பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவி கவிபாலாவை மீட்டு, அருகே உள்ள அழகிநாயகியபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கவிபாலா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர், மாணவியின் உடல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புழு நீக்கம் தொடர்பான மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மயக்கமடைந்த இரண்டு மாணவிகளும், அழகிநாயகியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர்கள் இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்தும், மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதியும் மறுத்தனர்.

மேலும், குடல்புழு நீக்கம் மாத்திரையை பரிந்துரை செய்த மருத்துவர் மற்றும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உடற்கூறு ஆய்வுக்கு அனுமதி வழங்குவோம் எனவும் பெற்றோர் தெரிவித்ததால் குழப்பம் நிலவியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் பெற்றோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதால், உடற்கூறு ஆய்வுக்கு பெற்றோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சனாதனத்திற்கு ஆபத்து வரும்போது.. விஜய் சொன்னது வேதனையே.. வானதி சீனிவாசன் கூறுவது என்ன?

அது மட்டுமல்லாமல், பெற்றோருக்கு இரண்டரை செண்ட் நிலமும் வழங்கியுள்ளனர். மேலும், தடயங்கள் அழியக்கூடாது என்பதால் உடற்கூறு ஆய்வுக்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.