தமிழகம்

மகன் இறந்த துக்கம்.. கோவையில் தலைமுறையே அழிந்த சோகம்!

மகன் இறந்த துக்கம் தாளாத நிலையில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி வக்தசலா. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், நேற்று அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக ஹோட்டல் ஊழியர், பழனிச்சாமி தம்பதி தங்கியிருந்த கதவை தட்டிப் பார்த்து உள்ளார்.

ஆனால், கதவை யாரும் திறக்கவில்லை. பின்னர், மாற்று சாவியைக் கொண்டு வந்து அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, அவர்கள் வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

பின்னர், உடனடியாக இது குறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் குடிச்சுட்டு கும்மாளம் அடிச்ச பிரபல நடிகர்கள்… சம்பவம் செய்த விஜயகாந்த்!

அதேநேரம், இது தொடர்பாக உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர், பின்னர், இது தொடர்பான விசாரணையில், தம்பதியின் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சல் வந்து உயிரிழந்து உள்ளார். இதனால் தம்பதி இருவரும் மனமுடைந்து இருந்தது தெரிய வந்தது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

13 minutes ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

35 minutes ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

51 minutes ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

1 hour ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

1 hour ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

2 hours ago

This website uses cookies.