Categories: தமிழகம்

உக்ரைனில் இருந்து கோவை வந்த மாணவர்கள்: ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்..!!

கோவை: உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த கோவை மாணவர்கள் 10 பேர் இன்று விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பிய நிலையில் பெற்றோர் அவர்களை கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்குச் சென்ற மாணவர்களில் கோவையைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இருப்பதாக அங்குள்ள மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே உக்ரைனில் இருந்து விமானம் மூலமாக இந்தியா புறப்பட்ட கோவையைச் சேர்ந்த சாய் பிரியா, ஜோனியா ஜோஸ், தர்ஷன், ரபீக், ஷெரின், வெண்மதி மற்றும் ரமேஷ் உட்பட 10 மாணவர்கள், போலந்து வழியாக இன்று டெல்லி வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.

போர் பதற்றம் உள்ள நாட்டில் தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு தவித்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை சொந்த ஊரில் பார்த்ததும் கண்ணீர் மல்க கட்டியணைத்தனர். இந்த காட்சி காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.

UpdateNews360 Rajesh

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

5 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

5 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

6 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

6 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

7 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

7 hours ago

This website uses cookies.