பெங்களூரில் இருந்து ரயில் மூலம் குட்கா கொண்டு வந்து விற்பனை செய்த நபரை சென்னை கொளத்தூரில் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் ஒரு வீட்டில் குட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 42வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொளத்தூர் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பண்டல் பண்டலாக முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த வீட்டில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சதீஷ்குமார் (வயது 31) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களைக் கொண்டு வந்து இங்கு உள்ள சிறு கடைகளுக்கு டெலிவரி செய்து விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.