தமிழகம்

’கவர்னர்’ பீடி.. ’அப்பா’ சொன்னார்.. ஆளுநர் மேடையில் பார்த்திபன் ‘நச்’ பேச்சு!

எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார்.

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். நடிக்கும்போது கூட, உங்களுக்கு சரியாக சிகரெட் கூட பிடிக்கத் தெரியவில்லை என்று சக நடிகைகள் கூறுவர். எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா. அவர் நிறைய பீடி பிடிப்பார்.

அவர் குடித்த பீடியின் பெயர் கவர்னர் பீடி. தயவுசெய்து இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஜோக் அல்ல, அந்த காலத்தில் இப்படியொரு பீடி இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இதனை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், ஒரு பீடிக்குப் பெயர் வைக்கும்போது எப்படி கவர்னர் பீடி பெயர் வைக்க முடியும்?

அது எவ்வளவு உயர்ந்த பதவி? அந்தப் பதவியை ஒரு பீடிக்கு பெயராக வைப்பது என்பது வன்முறையைத் தடுக்கத் தகுந்த விஷயம். அந்தப் பீடியை என் அப்பா என்னைப் போய் வாங்கிவரச் சொல்வார். அதைக் குடித்து கடைசிகாலத்தில் எனது அப்பா கேன்சர் வந்து இறந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அது எனக்குள் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது. காசநோய் வருவதற்கான காரணங்களில் புகை பிடிப்பதும் ஒன்று என்பதால் இதனைச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகின்றனர் என்பது மிகமிக முக்கியமானது. நிகழ்ச்சியில் தமிழ் அழகாக மணந்து வருகிறது.

இதையும் படிங்க: ’தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்’.. சவுக்கு சங்கர் கடும் தாக்கு. சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு!

தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக ஆளுநருக்கு என்னுடைய மரியாதையைத் தெரியப்படுத்துகிறேன். நான் தமிழில் பேசியது, ஆளுநருக்குப் புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்குப் புரியும், அதனால் தைரியமாக தமிழிலேயேப் பேசலாம் எனச் சொன்னார்கள்.

எனவே, தமிழ்ப் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த 5 நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது” எனத் எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

9 hours ago

ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…

10 hours ago

சல்மான் கானுடன் லிப் லாக்… தீயாய் பரவிய ராஷ்மிகா வீடியோ.. இறுதியில் டுவிஸ்ட்!

தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…

10 hours ago

உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!

நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

11 hours ago

ஃபயர் மோடில் ‘ராம் சரண்’…பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…

12 hours ago

ஆசையாக அழைத்த பெண்.. உள்ளே போனதும் லாக்.. திருப்பூரில் திகைத்த இளைஞர்!

திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

13 hours ago

This website uses cookies.