நடக்கும் போது ஜீன்ஸ் பேன்ட்டில் கேட்ட விசித்திரமான சத்தம்.. ₹42 லட்சமா? நூதன திருட்டு : விமான நிலையத்தில் சிக்கிய பயணி!!
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட பயணி ஒருவரின் உடமைகளை சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அந்த நபர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் 683 கிராம் மதிப்புடைய தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து அந்த பயணியிடம் யாருக்காக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தார் என அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
This website uses cookies.