Categories: தமிழகம்

கரூரில் 4 மணி நேரமாக பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் மறியல்: செய்தியாளரை செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டிய திமுகவினரால் பரபரப்பு!!

கரூர்: சுமார் 4 மணி நேரமாக கரூரிலிருந்து ஈரோடு, கோவைக்கு 4 மணி நேரமாக பேருந்து இல்லாததால் பயணிகள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் பஸ்பாடி கட்டும் தொழிலில் மட்டுமல்ல, போக்குவரத்து துறை அமைச்சர்கள் வாழ்ந்த ஊர் என்றால் மக்களிடையே கரூர் என்றுதான் சொல்வார்கள். அதிமுக ஆட்சியில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்பு அவரை தொடர்ந்து எம்ஆர் விஜயபாஸ்கர் என கடந்த 10 ஆண்டுகளாக தமிழக போக்குவரத்துத் துறையில் அங்கம் வகித்தவர்கள்.
இப்படி இருக்க, தமிழக அளவில் மைய மாவட்டமும், அனைத்து ஊர்களுக்கும் நகரங்களுக்கும், மாநகரங்களுக்கும் இடையே பேருந்துகள் 24 மணி நேரமும் அப்போதும் சரி இப்போதும் சரி இயங்கி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை முடித்து, திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில் என்று பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கரூரிலிருந்து ஈரோடு மற்றும் கரூரிலிருந்து கோவைக்கும் இடையே சுமார் 4.30 மணி நேரமாக எந்த பேருந்தும் இல்லை. ஞாயிறு மாலை 6 மணி முதல், இரவு 10.30 மணி வரை எந்த வித அரசுப்பேருந்துகளும் இல்லாத நிலையில் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ஈரோடு மற்றும் கோவை செல்லும் பயணிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையத்தின் இரண்டாவது கேட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளால் சுமார் 30 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கரூர் பணிமனையில் உள்ள பேருந்துகளை உடனடியாக இயக்கி பயணிகளை சமாதானப்படுத்தினர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

12 minutes ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

25 minutes ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

35 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

2 hours ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

3 hours ago

This website uses cookies.