கோவை : கோவை ரெயில் நிலையத்தில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சவுமியா பர்வீன். இவர் கோவை ரெயில் நிலையத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனது செல்போனை ரெயில் நிலையத்திலேயே விட்டு சென்றார்.
பின்னர் அங்கு ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அந்த செல்போனை மீட்டு அங்கிருந்த பயணிகளிடம் அந்த செல்போனில் குறித்து கேட்டனர்.
அதற்கு அங்கிருந்தவர்கள் இந்த செல்போன் தங்களுடைய இல்லை என்றனர். உடனே போலீசார் அந்த செல்போனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் சிறிது நேரம் கழித்து அந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய சவுமியா பர்வீன் அந்த செல்போன் தன்னுடைய எனவும், எங்கு தொலைத்தேன் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அதற்கு போலீசார் கோவை ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும் வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவித்தனர்.
இதையடுத்து சவுமியா பர்வீன் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி செல்போனை திருப்பி ஒப்படைத்தார். சவுமியா பர்வீன் செல்போனை மீட்டு வைத்திருந்த போலீஸ் ரம்யாவிற்கு நன்றி தெரிவித்து போலீசாரை பாராட்டி சென்றார்
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.