நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோவை ஆகும்.
இவர் கோவையில் உள்ள வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் 2,000 பணத்தை யாரும் திருடி சென்றதாக தெரியவந்தது.இதை அடுத்து தாய் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் காவல்துறை தொடர் விசாரணையில் செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியது ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவர்கள் தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் மீட்பதற்கான விசாரணையும் போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.