தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் நொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி, விஜயராகவன் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடலில் காற்று அதிகமாக இருந்ததன் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய மூன்று மீனவர்கள் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்தோணி நிலை என்னவென்று தெரியாமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தனது சகோதரியின் கணவர் அந்தோணியின் நிலை என்ன என்று தெரியாமலும் தனது சகோதரி மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து 5 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்தோணியின் மைத்துனர் 28 வயதுடைய வேதேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இறந்த வேதேஸ்வரன் உடல் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காணாமல் போன மீனவர் அந்தோணியை கண்டுபிடித்து தர வேண்டும் என அந்தோணி மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கடலுக்குச் சென்ற மற்றொருவர் நிலை என்ன என்று தெரியாமல் நொண்டி தோப்பு பகுதியில் உள்ள மீனவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.