பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்!
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில், பில் (பட்டியல் ) தொகை முறையாக சீனியாரிட்டி படி வழங்காமல் பாரபட்சமாக ஒரு சிலருக்கு மட்டும் தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாக பில் தொகை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இதை வரவேற்று சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் KCP Infra Limited நிறுவனர் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
இதை தவிர கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் ராபர்ட் ராஜா மற்றும் B&C Infra உள்ளிட்ட நிறுவனங்களின் பட்டியல் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
முடிவற்ற பணிகளுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது. இதனையும் தாமதமின்றி விரைவாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.