அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களை பிடிக்கும் என்று பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பழ கருப்பையா கூறியதாவது:- தமிழ்நாடு தன்னுரிமை கழக கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். வந்தபின் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசி, இங்கு இன்னும் ஒரு 10 நாட்களில் மாபேரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
இந்த புதிய கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை, உறுப்பினர் சேர்க்கையில் மூலமாக அறிந்து கொண்டோம். அடுத்த சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில், தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறுப்பிட்ட இடங்களை பிடிக்கும். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உள்ளது. கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில், மாற்றி மாற்றி ஆளுகின்ற இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான ஆட்சியை தான் நடத்துகிறார்கள்.
2003ல் அண்ணா திமுக மீது, கேஎஸ்எஸ்ஆர், பொண்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதன் பின்னர் 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் அந்த வழக்குகள் கவனிக்கப்படவில்லை. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்கி கொள்கிறது, அல்லது வழக்கு நடந்தால் அதில் உள்ள சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறி வழக்கு தள்ளுபடி ஆகின்றது.
அதிமுகவினர் மீதும் வழக்கு இருக்கும், திமுகவினர் மீதும் வழக்கு இருக்கும். ஆனால் யார் மீதும் தீர்ப்பு வராது, யார் யாருக்கும் நெருக்கடிகளை அளிப்பதில்லை, அவரவர்கள் ஆட்சியில் இந்த வழக்கு நீக்கப்படும், எதிரிகளை தண்டிப்பதில்லை. எனவே இந்த அரசியல் விளையாட்டை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
இந்த வெற்றிடத்தை தமிழ்நாடு தன்னுரிமை கழகம் நிரப்பும். மக்களிடம் பணம் தந்து வாக்குகளை நாங்கள் வாங்குவதில்லை. அந்த அளவுக்கு பணம் நிறைந்த கட்சியாக நாங்கள் இல்லை. எங்களை நம்பி வருகின்ற 10 உறுப்பினர்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்த உள்ளோம். மக்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி, போன்றவற்றை தரமாக வழங்கும் வகையில் ஆட்சி நடத்த இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.