திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை.
முதலமைச்சரோ அமைச்சர்களோ மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழ்நிலையில், பல இடங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் பெண் எம்பிக்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண்களும் தங்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை கொண்டு போய் அந்த வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது என வருத்தத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அங்கு அமைதி இருப்பது போல ஒரு சூழல் நிலவுகிறதே தவிர உண்மையில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு வேண்டுமென்று மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். எனவே, இதனால் நிச்சயமாக அங்கு அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.