திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை.
முதலமைச்சரோ அமைச்சர்களோ மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழ்நிலையில், பல இடங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் பெண் எம்பிக்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண்களும் தங்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை கொண்டு போய் அந்த வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது என வருத்தத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அங்கு அமைதி இருப்பது போல ஒரு சூழல் நிலவுகிறதே தவிர உண்மையில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு வேண்டுமென்று மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். எனவே, இதனால் நிச்சயமாக அங்கு அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.