Categories: தமிழகம்

குடியரசு தினம் முடிந்தும் பாமக எம்எல்ஏ அலுவலகத்தில் இறக்கப்படாத தேசிய கொடி… வேதனை தெரிவிக்கும் தேசப்பற்றாளர்கள்…!!

தருமபுரி : பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 6 நாட்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 33 கிராம ஊராட்சி, இரண்டு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி புதன்கிழமை நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

குடியரசு தினம் முடிவுற்று 6 நாட்களாகியும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இரவு பகலாக பறந்த நிலையில் உள்ளது. தற்போது வரை இறக்கப்படாமல் கொடிக்கம்பத்தில் உள்ளது. குடியரசு தின விழாவில் அரசு அலுவலகங்களில் காலை 7 மணிக்கு கொடிகள் ஏற்றப்பட்டு மாலை 5 மணிக்குள் கொடி இறக்கப்பட வேண்டும் என்பது மரபு இருப்பின் சட்டமன்ற அலுவலகத்தில் இன்றுவரை தேசியக்கொடி இறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தேசியப் பற்றாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

KavinKumar

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

11 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

12 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

14 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

15 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

16 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

17 hours ago

This website uses cookies.