மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து சென்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பெரியகண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து மேலூர், திருவாதவூர், மாங்குளம், சிட்டம்பட்டி, வெள்ளரிபட்டி, தேற்குதெரு, மானிக்கம்பட்டி, என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தா, உள்ளிட்டவற்றை கொண்டு, கிராம பெரியவர்கள் அனுமதி அளிக்கும் முன்னரே கண்மாயில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இதில் கட்லா, ரோகு, விரால், சிலேபி என பல்வேறு வகையான நாட்டுமீன்கள் கிடைத்த நிலையில் அவற்றை ஆர்வமுடன் தங்களது இல்லங்களுக்கு எடுத்து சென்றனர்.
மழை பொழிந்து, நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.