கோவை உக்கடம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை இருந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு, கோவை உக்கடம் வின்செண்ட் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர்கள் நின்றுகொண்டிருந்துள்ளனர்.
எனவே, அந்த இளைஞர்களை பிடித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது முன்னுக்குப் பின்னாகவே அவர்கள் பதிலளித்துள்ளனர். இதில், திடீரென ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் சுதாரித்துகொண்ட பொதுமக்கள், இருவரை சுற்றி வளைத்துப் பிடித்து அவர்களை சோதனை செய்துள்ளனர்.
இந்தச் சோதனையில் அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது குறித்து உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்த தகவலின் பேரில் உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையும் படிங்க: மகன்களுக்கு பாலியல் தொல்லை… GAY சகோதரர்களால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தொடர்ந்து, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள், கோவை வடவள்ளியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த பைசல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தப்பி ஓடியவர் குறித்தும், இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.