கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு இருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக பெரிய அளவில் குழியும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவை மாவட்டத்தில் எந்த பணிகளையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிவருவது. மாநகராட்சியின் இந்த அலட்சியத்தால் கோவை சுகுனாபுரம் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு இருப்பதால் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் வீனாகி வருகிறது. இதுவரை கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.