தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவி வருகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் குடிநீர் சரிவர வராததால் பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு ஒன்று கூடினர்.
காலி குடங்களுடன் ஒன்று கூடிய 20 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த இராமநாதபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதேபோல் கடந்த வாரம் குனியமுத்தூர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் குடித்தண்ணீர்காக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.