கோவை : கோவையில் சாலையோர வசிக்கும் முதியவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சக்தி ரோடு குரும்பபாளையத்தில் உள்ள புளிய மரத்தின் கீழே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். முதியவருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் உணவளித்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகளுக்கு பாதுகாவலனாக இந்த முதியவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை மரத்தின் கீழ் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து முதியவரை அடக்கம் செய்ய முடிவெடுத்து அவருக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தி சம்பரதாயம் முறைப்படி அடக்கம் செய்தனர்.
சாலையில் யாரேனும் கீழே விழுந்து கிடந்தாலும் யாரும் உதவி செய்யாத இந்த காலகட்டத்தில் ஊர் மக்களே ஒன்றிணைந்து சாலையோர முதியவரை அடக்கம் செய்தது கோவை மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.