கோவை : கோவையில் சாலையோர வசிக்கும் முதியவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சக்தி ரோடு குரும்பபாளையத்தில் உள்ள புளிய மரத்தின் கீழே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். முதியவருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் உணவளித்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகளுக்கு பாதுகாவலனாக இந்த முதியவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை மரத்தின் கீழ் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து முதியவரை அடக்கம் செய்ய முடிவெடுத்து அவருக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தி சம்பரதாயம் முறைப்படி அடக்கம் செய்தனர்.
சாலையில் யாரேனும் கீழே விழுந்து கிடந்தாலும் யாரும் உதவி செய்யாத இந்த காலகட்டத்தில் ஊர் மக்களே ஒன்றிணைந்து சாலையோர முதியவரை அடக்கம் செய்தது கோவை மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.