Categories: தமிழகம்

இளைஞர் மர்ம சாவு.. எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் ; வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது..!!

சிவகங்கை அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இறப்பிற்கு காரணமானவரை கைது செய்ய கோரி எஸ்.பி அலுவலகம் முற்றுகையிட்ட உறவினர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் முத்துலெட்சுமியின் மூத்த மகன் அருன்ராஜ். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே கோவிலில் வழிபாடு தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை மணிகண்டன் அவரது உறவினர்களுடன் கிராமத்தில் உள்ள கோவில் வாசலில் பேசிக்கொண்டிருக்கும்போது, அதே நேரம் வேலை முடித்து வீடு திரும்பிய அருன்ராஜுக்கும், மணிகண்டனுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மணிகண்டனை அருன்ராஜ் தாக்கியதாக கூறி மதகுபட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாரளிக்கவே, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று 4 ஆம் தேதி பிணையில் அருன்ராஜ் வீடு திரும்பிய நிலையில், மணிகண்டன் அருன்ராஜை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருண்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், அங்கு அவரது உறவினர்கள் இறப்பிற்கு காரணமான மணிகண்டனை கைது செய்யக்கோரி சிவகங்கை மானாமதுரை சாலையில் உள்ள அம்பெத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து காவல்துறை அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து, இரண்டாவது நாளாக காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தை உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதுடன், வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார் சமாதானம் செய்த நிலையில், சமாதானம் ஆகாத உறவினர்கள் அருகேவுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் இறந்தவரின் உறவினரான பெண் காவலர் (சென்னை) ஒருவர் வந்திருந்த நிலையில், அவரையும் கைது செய்ய ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பெண் காவலரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

12 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

14 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.