கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 21 வது 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் கெண்டையூர் சாமப்பா லேஅவுட்டில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .
இந்த குடியிருப்புக்களுக்குஒரு நாள் விட்டு ஒரு நாள் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு மிகவும் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததாக தெரிகிறது. மேலும்குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி , கொழுப்பு, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாக தெரிகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குடிநீரைக் குடித்த ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்குஇப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தகவலையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கும் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாயை உடைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது குடிநீர் வரும் இணைப்பு குழாய் அருகே இறைச்சி கழிவுகள்
காணப்பட்டது.இந்த இறைச்சி கழிவுகள் குடிநீர் குழாய்க்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய்களை சுத்தம் செய்து மீண்டும் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த வார்டில் உள்ள பொது மக்கள் குடிநீரை குடிக்க அச்சமடைந்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.