புதுச்சேரி : புதுச்சேரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பூக்கடை ஊழியரை கொலை செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி வளாகத்தினுள் பூக்கடைகள் அமைந்துள்ளது. இதனிடையே பூக்கடை ஒன்றில் காரைக்காலை சேர்ந்த அருளானந்தம் (38) என்பவர் கடையிலேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அருளானந்தம் மற்றும் அருகில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் 2 நபர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது உச்சகட்ட மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருளானந்தத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 நபர்களும் தப்பியோடினார்.
மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த செக்யூரிட்டி கொலை சம்பவம் தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.