பொறுமையை இழந்த பொதுமக்கள்.. தண்டவாளத்தில் இறங்கி மறியல் : 500 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!!
சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்வதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகாரளித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாகா சிவகங்கையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கோட்டை வரும் விரைவு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதற்கு அரசு நடவடைக்காததை குறிப்பிட்டு, இன்று சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர்களை காவல்துறையினர் அதிரடியாய் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.