வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அரசின் பணிகள் பற்றி எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கட்டும், மக்கள் பாராட்டினால் போதும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது.
அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் அதற்காக இன்று இரவு புறப்பட்டு செல்கிறேன் என்றார். மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட உள்ளார்.
சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து வெள்ள பாதிப்புகளை ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். சென்னை ஓட்டேரி, திருவிக நகர், கொளத்தூரில் மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
ஓட்டேரியில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் உந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.