Categories: தமிழகம்

வெற்றிபெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் : தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போதும், பிரச்சாரத்தின் போதும் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திமுகவினரின் செயலுக்கு பல்வேறு இடங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டதினால் எதிர்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தனர்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று கோவை பந்தயசாலை பகுதியில்,உள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் நாகராஜனை சந்தித்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்பி வேலுமணி தலைமையில் இன்று மனு அளிக்கபட்டது.

இதனை தொடர்ந்து பந்தயசாலை பகுதியில், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நிறைவு பெற்றுள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உளள்து, இந்த நிலையில் தேர்தல், அதிகாரிகள், திமுகவிற்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே முறையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். உடனுக்குடன் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க வேண்டும்.” என்றார்.

KavinKumar

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

1 hour ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

3 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

4 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

4 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

5 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

5 hours ago

This website uses cookies.