சென்னை: கடந்த 124 நாட்களாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பெட்ரோல் விலைதான். 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல் – டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
பெட்ரோல் விலை இப்போது பல்வேறு நகரங்களில் 100 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. இன்று வரை 124 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், நஷ்டத்தைத் தடுத்து பிரேக் ஈவன் ஆகவே, 10 நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் 12.1 ரூபாயும் டீசல் ஒரு லிட்டர் 15.1 ரூபாயும் உயர்த்தப்பட வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.