Categories: தமிழகம்

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்கள்? விசாரணையில் பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 60) இவர் பாஜக கிளை தலைவராக உள்ளார்.

இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் கல்யாணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது நள்ளிரவில் சுமார் ஒரு மணி அளவில் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் வீட்டின் முன்புற பகுதியில் ஜன்னல், மின்சாதன பெட்டி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது, உடனடியாக வீட்டின் வெளியே வந்த கல்யாணி தீயை அணைத்தார்.

இதுகுறித்து கல்யாணி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பெட்ரோல் கொண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

44 minutes ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

1 hour ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

1 hour ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

2 hours ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

2 hours ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

3 hours ago

This website uses cookies.