சென்னையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – பாரிமுனையில் வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வழக்கம் போல இன்று காலை பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த ஒருவர், ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று சாமி சிலையை பார்த்து கூறியபடி, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவில் மீது தூக்கி எறிந்தார். இதனால், அப்பகுதி தீப்பற்றி எரிந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலின் எதிரே உலர் பழங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருவதும், மதுபோதையில் இருந்த அவர், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
This website uses cookies.