கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் கைதான பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான இவரது வீட்டிற்கு முன், கடந்த மாதம் 24-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த குமரி காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில்,பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பிஎப்ஐ கட்சியை சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, முக்கிய நபரான குளச்சல் பகுதியை சேர்ந்த ஷமில்கான் என்ற வாலிபரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரை இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில் ,இன்று மதியம் குளச்சலில் உள்ள ஷமில்கான் வீட்டை வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் ஷமில்கான் பயன்படுத்திய லேப்டாப், 4-சிம் கார்டுகள், வங்கி பாஸ் புக், பிஎப்ஐ கட்சியால் வழங்கப்பட்ட சிறந்த சமூக சேவகருக்கான ஷீல்டுகள் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.